வாங்க பழகலாம்
| Re:Hi Friends Arifarook 31.7.2010 12:38 |
| Re:I am new sri kathir 31.7.2010 6:37 |
| I am new veda 30.7.2010 23:38 |
| புளி பொங்கல் |
|
|
|
தேவையானவை: பச்சரிசி நொய் : 250 கிராம் மிளகாய் வற்றல் : 7-8 வெந்தையம் : 1 ஸ்பூன் தனியா : 1 ஸ்பூன் நிலக்கடலை : 50௦ கிராம் பெருங்காயம், மஞ்சள் பொடி : சிறுதளவு உப்பு : தேவை போல் நல்லெண்ணெய் : 25 ml வெல்லம் : சிறிய கட்டி கடுகு : 1/2 ஸ்பூன் புளி : 75 கிராம் செய்முறை: புளியை நன்றாக கரைத்து வடிகட்டி வைத்துகொள்ளவும். வெறும் வானெலியில் மிளகாய் வற்றல், வெந்தையம், தனியா இவற்றை சிவக்க வறுத்து பொடி செய்யவும். குக்கரில் நல்லெண்ணெய் விடவும். கடுகு போட்டு வெடித்தவுடன், கடலை, கருவேற்பிலை போட்டு, நன்றாக வறுக்கவும். ஒரு கப் நொய்க்கு இரண்டிரை கப் புளி தண்ணி என்ற கணக்கில் புளி தண்ணி விடவும். தண்ணி கொதித்ததும் அதில் மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயம், அரைத்த பொடி, வெல்லம் இவற்றை போடவும். பின்னர், அரிசி நொய்யை நன்றாக களைந்து, அதில் போட்டு, கிளறி, குக்கர் மூடவும். மூன்று விசில் வந்த உடன் அணைக்கவும். நன்றாக ஆறியவுடன், கிளறி, பொறித்த உளுந்து அப்பளமுடன் சாப்பிடவும்.
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)
![]()
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|




