வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
கொடுங்கள் பெறுவீர்கள் Print E-mail
! கொடுங்கள்.. பெறுவீர்கள்!....
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா , தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும் , உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர , வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி , அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ் , கைதட்டல் , விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து , தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து , முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும் , மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.
இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள்!!
விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !

வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை ! 
--ZARU

கருத்துக்கள் (15)Add Comment
...
பதிவாளர்: பாலு, June 27, 2009
அருமையான கதை. நடை முறை வாழ்க்கைக்கு ஏற்றதும் கூட.
...
பதிவாளர்: zaru, June 27, 2009
பாலு தங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.smilies/smiley.gif
...
பதிவாளர்: nizamudeen, June 27, 2009
நல்ல கருத்தும் அதை விளக்கும் பொருத்தமான கதையும்.
...
பதிவாளர்: zaru, June 28, 2009
நல்ல கருத்து எல்லோரையும் சென்றடையவேண்டும் அல்லவா? ஆமாம் . நிஜாமுத்தீன் மிக்க மகிழ்ச்சி.
...
பதிவாளர்: feroza, June 28, 2009
கதை சூப்பர். மனிதனை நல்ல முறையில் சிந்திக்கவும். செயல்படவும் தூண்டும் கதை.மனித
வாழ்வில் மிஞ்சுவது நினைவுகளே.அவை சந்தோசம் தருவதாக அமைவதுதான் வரமே.
...
பதிவாளர்: SANTHOSHI, June 28, 2009
கொடுங்கள்! பெறுவீர்கள்!

கதையின் தலைப்பே அருமை! அதில் உள்ள கரு இன்னும் அற்புதம். இன்றைய பொழுதை இனிதாய் ஆக்கியவரு ZARU நன்றி!.
...
பதிவாளர்: zaru, June 28, 2009
ஃபெரோசா,சந்தோஷி கொடுத்து பெறுவதில் இருக்கும் இன்பமே தனிதான்.smilies/smiley.gif
...
பதிவாளர்: malikka, June 28, 2009
கொடுத்துப்பார் அதற்கானகூலி ஈருளகிலும் கிடைக்கும். நல்ல கருவான கதை
ஜாரு..நன்றி
...
பதிவாளர்: jaleela, June 29, 2009
ஜாரு அருமையான கதை , கொடுங்கள் பெறுவீர் நல்ல தலைப்பும்,
என்ன நீங்களும் போல் கதை எழுத ஆரம்பித்து வீட்டீர்களா? எழுதுங்கள்.
...
பதிவாளர்: mofamalik, June 29, 2009
very nice......
...
பதிவாளர்: zuhara, June 29, 2009
உண்மையுள். சந்தேகம் உண்மையுன் அடிப்படையாக கொண்டது அல்ல. அந்த சதேகதொடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கின்றோம்.இது 100/100 உண்மை. நன்றி zaru
...
பதிவாளர்: zaru, June 29, 2009
ஜலீலா எனக்கு கதை எழுதவெல்லாம் வராதுபா,மெயில் படித்தது,நல்ல செய்தியை இது போன்ற தளங்களில் சொன்னால் நாலு பேருக்கு தெரிய வருமே என்று தான்.
மலிக்கா,மோஃபா,சொஹ்ரா கருத்திற்கு மிக்க நன்றி.smilies/smiley.gif
...
பதிவாளர்: paramaswari, September 14, 2009
ரொம்ப ரொம்ப அருமையான கதை .இந்த கதையும் ,கருத்தும் என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்து விட்டது.
...
பதிவாளர்: thendusaran, September 14, 2009
The more you share, the more blessed you are............அற்புதமான கதை.வாழ்க வளமுடன்.
...
பதிவாளர்: zaru, September 15, 2009
thendusaran,இவ்வளவு நாள் கழித்து கொடுங்கள் பெறுவீர்கள் என்பதை பார்த்தவுடன் மனசு சந்தோஷ்மாக இருந்தது,நான் படித்த கதையை சுருக்கி கொடுத்து இருந்தேன்,என் மனதை தொட்ட கதைகளுள் இதுவும் ஒன்று.
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form