வாங்க பழகலாம்
| Re:Hi Friends Arifarook 31.7.2010 12:38 |
| Re:I am new sri kathir 31.7.2010 6:37 |
| I am new veda 30.7.2010 23:38 |
| பறந்தன பறவைகள் [மலிக்கா] |
|
|
|
பறந்தன பறவைகள்
ஒரு மரத்துக்கிளிகளாய் ஒரே ஒரு நாளின் மின்சாரத்துண்டிப்பு பாரதவிலாஸாய் கூடியிருந்த நாங்கள் கடல்கள் கடந்துவந்த எங்களுக்குள் ஓர் பாசப்பிணைப்புகள் கண்கள் பார்த்து வார்த்தைகள் கோர்த்து- சிலநேரங்களில் பாஷைகள் புரியாதபோதும் பாலைவன ரோஜாக்களாய் பகிர்ந்துகொண்ட சட்டென்று துண்டிக்கப்பட்ட மின்சாரத்தால் திசைகள் மாறியபோதும் எங்களின் நேரங்கள் கிடைக்கும்போது ஒருநொடியாவது காலங்கள் தரும் எத்தனையோ மாற்றங்கள் அந்த மாற்றம்போல்தான் ”நட்பும்” அன்புடன் மலிக்கா
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (14)
![]()
...
பதிவாளர்: zulfiyakani, June 27, 2009
அவர்கள தேடுரியோ, நல்ல தோழிகள்தன் அவங்கலெல்லாம் உனக்கு, சரி சரி அழுவாத, நான்யிருக்கென்
![]()
...
பதிவாளர்: laksha, June 28, 2009
மலிக்கா,
ரொம்ப நல்லாயிருக்கு இந்த கவிதை. பாஷைகள் புரியாத போது புன்னைகை ஒன்றே நட்புக்கு கதவு திறக்கும் என்பதை அழகா சொல்லியிருக்கீங்க.
...
பதிவாளர்: sarulatha, June 28, 2009
மலிக்கா உங்கள் கவிதை மிகவும் அருமை , நட்புக்கு ஈடு எது , அருமையான வார்த்தைகள் ,
...
பதிவாளர்: SANTHOSHI, June 28, 2009
மலிக்கா! அருமையான கவிதை. பழைய நினைவுகளை தட்டிஎழுப்பிவிட்டீர்கள். இருந்தாலும் அதுவும் ஓர் சுகமே! வாழ்த்துக்கள்!
...
பதிவாளர்: rammalar, June 30, 2009
malikka....கவிதை நன்றாக உள்ளது.
'புன்னகை ஒன்றிருந்தால் போதும்',. புதிய தேசத்திலும் புகுந்துவிளையாடிவிடலாம். நல்ல கருத்து. வீட்டுக்கு வரவேற்பறை போல மனிதனுக்குப் புன்னகை... ------ நட்புக்குள் பொய்கள் கிடையாது நட்புக்குள் தவறுகள் நடக்காது நட்புக்குள் தன்னலம் இருக்காது நட்புக்கு ஆண்பெண் தெரியாது நட்பு என்னும் மூணெழுத்து பூமியைக் கட்டி நீ நிறுத்து ---- குழப்பத்தில் நம்மை தெனிய வைக்கவும் நாம் பயப்படும்போது நமக்கு தைரியம் சொல்லவும், நாம் ஏமாறாமல் இருக்க எச்சரிக்கை செய்யவும், நாம் இல்லாதபோது நம்மை நினைக்கவும் நாம் மறந்ததை நமக்கு நினைவுபடுத்தவும், அசாதாரண உதவிகளை நமக்குச் செய்யவும், நாம் தவறு செய்தாலும் நம்மை விட்டுப் பிரியாமல் இருக்கவும், நாம் அழும்போது நம்மை சிரிக்க வைக்கவும் தயாராக இருப்பவர்களே நண்பர்கள். இதைச் சொல்லும் போதே சாமுவேல் ஜான்சன் சொன்னதை மீண்டும் ஒருமுறை தெனிவுபடுத்திக்கொள்ள வேண்டும். மேற்சொன்ன எல்லாத் தகுதிகளும் நமக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் நண்பர்கள் கிடைப்பார்கள்; கிடைப்பவர்கள் நிலைப்பார்கள். கிடைக்கவும் நிலைக்கவும் ஆவன செய்வோம். -------- அன்புடன் அ.இராமநாதன்
...
பதிவாளர்: sarulatha, June 30, 2009
மலிக்கா நீங்கல் சொல்லும் ஒவொரு வார்த்தைகளும் உண்மை , நீங்கள் கவிஞர் அதனால் கவிதையில் உங்கள் எண்ணங்களை வடித்து விட்டீர் நட்புக்கு ஈடு எது ? ராமநாதன் சார் உங்கள் கருத்துகளும் மிகவும் அருமையாக உள்ளது . தமிழ் குடும்பம் முலம் தங்களை எல்லாம் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்சி அளிக்கிறது
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|





