குறிப்புகள் கதம்பம்

அனைத்து குறிப்புகளையும் ஒரு சேர காணும் இடம்

 
உள்ளக் குமுறலை
ஒருவருக்குமறியாமல்
கொட்டித் தீர்க்க
இடம் தேடிய மனம்
 
அன்னாந்து பார்த்ததும்
அந்திவானம் அவசரமாய்
இன்றனக்கொன்றும்
மனக்குறையில்லை
அதனால்
 
மேகம் கூடி
வலம் வரவில்லை
மழை வரவும்
வாய்ப்பில்லை
என்பதுபோல்
வெளித்துக் கிடக்க
 
வேதனைகள் வேர்விட்டு
வேகமாய் முகம்கறுக்க
விதியிதுவோவென
வெதும்பியபடி
 
குளியளறை நோக்கிய
கால்கள்
கெளரவமாய் கொட்டியது
குமுறலைக் கண்ணீராய்
 
தண்ணீர் மட்டுமறிய
சல சலவென
ஓடியது
ஷவரின் அடியில்...
 

அன்புடன் மலிக்கா


 
 

 


Tagged in: Untagged 
கருத்துக்கள் (0)Add Comment
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
Feedback Form