அன்போடு வருகிறேன்
அன்னைதேசமே உனைக்காண
உறவுகளை பார்த்து
ஊர்கதைபேசி
குளத்தில் நீந்தி
துள்
அன்போடு வருகிறேன்
அன்னைதேசமே உனைக்காண
உறவுகளை பார்த்து
ஊர்கதைபேசி
குளத்தில் நீந்தி
துள்
அம்மா அம்மா என்னப்பாரு
அந்தச் சனியக்கொஞ்சம் எறக்கிவிடு
வயித்துல என்ன சுமந்தியே-இப்போ
வழியில சுமக்க முடியலையா
அம்மா அம்மா இதக்கேளு
அழுது சொல்லுறேன் கொஞ்சங்கேளு
நாயின் வாழ்வைப் பார்த்தயா
நா அழறதுக்கூட கேக்கலையா
பிஞ்சுவிரலை பிடித்துக்கொண்டு
பரக்கப் பரக்க போகின்றாய்
ஓடிவரவும் முடியலையே-என்னால்
ஒன்னோட வேகத்துக்கு
பத்துமாதம் சுமந்த என்னை
பரிதவிக்கவிட்டு விட்டு
செல்லப்பிரணி என்பதனால்
சோக்கா தோளில் சுமந்தாயோ!
நாலுகால்கள் இருந்தபோதும்
நாயை நடக்கவிடுவதில்லை-ஆனால்
நான் தத்தித் தத்தி நடக்கின்றேன்
தடுக்கிக் கீழே விழுகின்றேன்
பெற்றவளே பெற்றவளே
பிள்ளை சொல்வதைக் கேளம்மா
பெற்ற பிள்ளையைவிட உனக்கு
பாசம் அந்த பிராணிமேலா?
உன்பொறுப்பைக் கண்டு வருந்துகிறேன்
உனக்கு மகளாய் வெதும்புகிறேன்
நாயிக்குயிருக்கும் நன்றிபோல
நானிருக்கமாட்டேனென நினைத்தாயோ
அடுத்த ஜென்மம் ஒன்றிருந்தால்
அதில் நீ எனக்கு மகளாகு
பாசமென்றால் என்னவென்று-உனக்குத்
பாடம் படித்துத் தருகின்றேன்...
இதை பாட்டாப் பாடுங்கோ பாப்போம் அம்மா இங்கே வா வா அந்த ரைமிங்கில்
[யாரு[ம்மா]ப்பா இந்த போட்டோவ எடுத்தது.
அன்புடன் மலிக்கா..
அன்புடன் மலிக்கா