அப்பா அப்பப்பா!!!! Print E-mail

 

4வயதில்--"எங்கப்பா போல ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது."

6---"அவருக்கு எல்லா விஷயமும் அத்துபடி"

10---"தங்கமானவர்.ஆனால் பொசுக் பொசுக்கு கோபம் வந்திடும்.
          மிட்டாய் தின்னதுக்காக என்னை அடிச்சிட்டாரு."

12---"நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது,
         என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாரு

14--"அவருக்கு சீக்கிரம் திருப்தியே வராது,நாப்பது மார்க் எடுத்தால் அய்ம்பது
        எடுக்கணும்பாரு.99மார்க் எடுத்தாகூட--ஒரு மார்க்கை ஏன் கோட்டை விட்டே'ம்பாரு'

16---என்னைச் சுத்தி என்ன நடக்கிதுங்கிரதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரு.
      பழங்காலத்து மனுஷனாவே இருக்காரு."

18---"எடுத்தேன் கவிழ்த்தேன்னுதான் எல்லா நடவடிக்கையும்."

20---"அப்பப்பா,அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல.
       அம்மா எப்படிதான் காலம் தள்ளறாங்களோ?"

25---"எது கேட்டாலிம் 'கிடையாது','இல்லை','கூடாது'ங்கிற பேச்சுதான்.
        இவரெல்லாம் ஒரு மனுஷனா?"

30--என் பையனை சமாளிக்கிறது கஷ்டமா இருக்கு.
     என்னை எங்கப்பா எப்படித்தான் சமாளிச்சாரோ?"

40--"என்னை எங்கப்பா எவ்வளவு ஒழுக்கத்தோட,
      கட்டுப்பாட்டோட வளர்த்தார் தெரியுமா? அதனால்தான்,இந்தளவு நல்லா இருக்கேன்."

45--"எங்கப்பாவை நினைக்கும்போது ரெம்ப பெருமையா இருக்கு."

50--"ஒருத்தனை மேய்க்கிறதுக்கு எவ்வளவு சிரமப்படறேன்?நாங்க மூன்று பேரு.
       ஒரு அண்ணன் மற்ற தம்பி அத்தனை பேரையும் கட்டுக்கோப்பா வளர்த்தார் எங்கப்பா.
         அவர் கிரேட்."

55--"ஒவ்வொரு விஷயத்தையும் திட்டம் போட்டு முடிக்கிறதுல அவரை மிஞ்ச
        ஆளே இல்லை."

60---"எங்கப்பா போல ஒரு ஆளை பார்க்கவே முடியாது."

(நான்கு வயதில் நாம் சொன்னது சரிதான் என்பதை உணர்வதற்குள்
 56ஆண்டுகள் ஓடி விடுகின்றன).

 

 


Comments (4)Add Comment
...
written by Julee, March 24, 2008
Nice Nice...Simply Superb...Anything you have abt amma ???
...
written by Jaleela, March 24, 2008
வாவ் ராஜிவ்//
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
ஒருகால கட்டத்தில் தான் நினைத்து வருந்துகிறோம்.
அம்மவை பற்றி கேட்கவே தேவையில்லை என்னேரமும் நம் முன்னேற்றத்திற்காக வேண்டுபவள்.
அம்மாவிற்கு இனையாக இந்த உலகில் வேறு எதுவுமே ஈடு இணை கிடையாது.
ஜலீலா
...
written by abusali2002, March 26, 2008
எல்லாமே வேடிக்கைதான்...அது தனக்கேற்படும் வரை
ஒரு சமயம் எங்கோ படித்தது...
இதை படிக்கும் போது நினைவில் வந்தது....
அருமையான வாக்கியங்கள்.
நன்றி நண்பரே... பணி தொடரட்டும்.
_அபுசாலி :zzz
...
written by kavithadevi, February 06, 2010
உண்மை தான். நாம் அனுபவிக்கும் போது தான் தெரியும். நீங்கள் எழுதிய அனைத்தும் நிதர்சனமான உண்மை. நன்றி... இன்னும் தொடர வாழ்த்துக்கள்.
Type in (Press Ctrl + g to toggle)

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy