| வெங்காயத்தின் கதை |
|
|
|
{niftybox} ஒரு ஊர்ல ஒரு வெங்காயம், தக்காளி, ஐஸ்கிரீம் மூன்று பேரும் நண்பர்களாக இருந்தன.ஒரு நாள் மூணும் கடலுக்கு குளிக்கப் போனாங்க. அப்போ சொல்ல சொல்லக் கேட்காம.. ஐஸ்கிரீம் தண்ணியில போயி கரைஞ்சி போயிடுச்சாம். வெங்காயமும் தக்காளியும் அங்கேயே புரண்டு புரண்டு அழுதாங்களாம். வீட்டுக்கு வர்ற வழியில தக்காளி லாரியில அடிபட்டு நசுங்கிப் போயிடுச்சாம். வெங்காயம் உடனே ரொம்ப அழுதுச்சாம். அப்டியே அழுதுகிட்டு கடவுள்கிட்ட போயி "ஐஸ்கிரீம் செத்தப்போ நானும், தக்காளியும் அழுதோம். தக்காளி அழுதப்போ நான் அழுதேன். ஆனா இப்போ நான் செத்தா எனக்காக அழுவறதுக்கு யாரும் இல்லையே" அப்டின்னு சொல்லி வெங்காயம் முறையிட்டதாம். அதுக்கு கடவுள் சரி, இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ எல்லாரும் அழுவாங்க அப்டின்னு வரம் கொடுத்தாராம். இனிமே வெங்காயம் நறுக்கும்போது கண்ணுல ஏன் தண்ணி வருதுன்னு யாராச்சும் கேட்டா.. திருதிருன்னு முழிச்சிகிட்டு இருக்காம இந்தக் கதையை சொல்லி எஸ்கேப் ஆயிடுங்க... இப்ப நான் எஸ்கேப்..... ;) ;) இளவழகன் {niftybox}
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (5)
![]()
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|





