உபயோகமான தகவல்களுக்கு பின்னூட்டம் (Comments/ Facebook Like) இட்டால், இதை பதித்தவர்களுக்கு ஊக்கமளிக்கும்!
இரவு நேரத்தில் கடுமையான இருமலால் கஷ்டப்படுகிறீர்களா?
இரவு நேரத்தில் கடுமையான இருமலால் கஷ்டப்படுகிறீர்களா?- சிறியதுண்டு இஞ்சி எடுத்து அதனைவாயில்போட்டு அந்தஜீஸ்மட்டும்விழுங்கவும் இஞ்சியைசிலநேரத்திர்க்குவாயில்வைத்துதுப்பவும்
- விக்சை எடுத்து குழந்தைகளின் கால் பாதத்தில் நன்கு தடவி காலுறை அணிந்து சிறிது நேரம் படுக்கவைக்கவும்.5 நிமிடத்தில் இருமல் நின்று விடும்.பெரியவர்களாக இருந்தால் விக்சை எடுத்து கால் பாதத்தில் நன்கு தடவி ஒரு போர்வையால் நன்கு போர்த்திக்கொள்ளவும். நல்ல பலன் சீக்கிரத்தில் கிடைக்கும்.
- அடுத்த நாள் காலை பாத்திரத்தில் சூடான தண்ணீர் எடுத்து அதில் கல் உப்பு போட்டு நீராவிகாட்டவும் இதுதலையில் உள்ளநீரை எடுக்கும்.
வழங்கியவர்-ஹவ்வா அலியார்
உடனடிச் சக்திக்கு 5 ஆரோக்கியமான உணவுகள்
நம் உடலில் சோர்வு ஏற்பட்டால் உடனே ஒரு கப் காஃபி அல்லது டீ அல்லது குளிர்பானம் அல்லது பிஸ்கட், கேட் என்று சாப்பிடுகிறோம்... இதில் நமக்கு அந்த நேரத்துக்கு மட்டும் தான் உடலுக்கு தெம்பை தரும்.. அந்த நாள் முழுவதும் ஆரோக்கியமும் அதே நேரம் உடனடிச் சக்தி தரும் எளிய 5 உணவுகள் உணடு. அதனை பற்றி பார்ப்போம்.. (ஆரோக்கிய உணவு முறைகள் என்ற நூலில் இருந்து எடுத்த தகவல்)
முதல் உணவு:
ஓட்ஸ்:
தினமும் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுங்கள். ஒரு கப் ஓட்ஸில் 150 கலோரி உடனே உடலுக்கு கிடைக்கிறது.
உடலுக்கு வலிமை தரும் ஓட்ஸில் பொட்டாசியமும், துத்தநாகமும் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும் "அவினின்" என்ற இரசாயனப் பொருளும் இருக்கிறது. இதனால் உடலும் உள்ளமும் உடனடியாகச் சக்தி பெருகிறது.
இந்த ஓட்ணினை காலை 11 மணிக்கும் மாலையில் 3 மணி அளவில் கஞ்சியாக செய்து சாப்பிடலாம்.
வைட்டமின் "சி" நிறைந்த உணவுகள்:
முதுகுத் தண்டிலும் இரத்த அணுக்களிலும் வைட்டமின் சி அதிகம் கலந்துள்ளது. நம் உடலில் எல்லாத் திசுக்களிலும் இந்த "சி" உள்ளது.
உடல் துன்பத்தையும் மனத்துன்பத்தையும் ஒருவர் தாங்கிக் கொண்டு உழைத்தால் அவர் உடலில் வைட்டமின் "சி" சரியான அளவில் இருக்கிறது என்று அர்த்தம்.
நம் உடலை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக்கொள்கிறது வைட்டமின் "சி"
இதனை நாம் ஆரஞ்சு சாறு, கொய்யா, நெல்லிக்காய் முதலியவற்றிலிருந்து எளிதாகப் பெறலாம். இதில் "சி" அதிகம் உள்ளது.
இது தவிர தினமும் ஒரு கப் கொண்டைக்கடலை, அல்லது கடலை பருப்பு சுண்டல் சாப்பிடலாம்.
காலையில் இட்லி, தோசைக்கு சட்னியாக பச்சமிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடலாம். இதிலும் வைட்டமின் "சி" இருக்கிறது.
நீரழிவு நோயாளிகள் ஊறவைத்த கொண்டகடலையினை வேக வைத்து தினமும் சாப்பிட்டால் எளிதாக உடலுக்கு சக்தி கிடைக்கும்.
முட்டைகோஸ் சூப், பாசிப்பருப்பு பாயாசம், முளைவிட்ட பச்ச பயிறு சாலட் இதிலும் அதிகமாக வைட்டமின் "சி" அதிகமாக இருக்கு.
தினமும் காலை சூப், ஆரஞ்சு ஜூஸ், சுண்டல் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடியாக சக்தி கிடைக்கிறது.
தண்ணீர்:
தண்ணீரில் எந்த சத்துக்களோ அல்லது எந்த கலோரிகளோ எதுவும் இல்லை.. ஆனால் அரை டம்ளர் தண்ணீர் உடலில் குறைந்தாலும் மனதிலும், உடலிலும் சோர்வு ஏற்ப்படும்..
தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்
ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவிகிதம் வரை தண்ணீர் தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது.
தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடங்களையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கிவிடும்
ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.
ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.
பார்லி தண்ணீர்:
பார்லி அரிசியில் மூளைக்கு புத்துணர்வு தரும் பாஸ்பரஸ் உப்பு அதிகமாக இருக்கிறது. நரம்புகளைப் பலப்படுத்தும் "பி" வட்டமினும் உள்ளது. பார்லியைக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த தண்ணீரை பாட்டிலில் வைத்து உடலில் சோர்வு ஏற்படும் பொழுது ஒரு டம்ளட் பார்லி தண்ணீர் குடித்தால் இரத்தத்தில் கலந்தவுடன் உடலின் குளூக்கோஸ் அளவு உயர்ந்து ஞாபகசக்தி அதிகரிக்கும்... மிகவும் துடிப்புது உற்சாகத்துடன் வேலை செய்வதனை நீங்களே உணர்விகள்
ராகிமாவு:
இதில் கால்சியம் அதிகம். .. இதனை தினமும் ஒரு வேலை சாப்பிட்டுவந்தால் உடலுக்கு தேவையான சக்தியினை இது தருகிறது... கடினமான உழைப்பாளிகள் காலையிலும் மாலையிலும் 2 கப் கேழ்வரகுக் கஞ்சி, அல்லது 2 கேழ்வரகு ரொட்டியோ சாப்பிடுவதால் குறைந்தது 5 மணி நேரம் சுறுசுறுப்பாக இருக்கலாம். உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை இதில் உள்ள கால்சியம் புதுப்பித்து விடுகிறது
{ic_note}faizakader{/ic_note)
சக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா?
சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா? என்பது பொதுவாக யாருக்கும் தெளிவாகத்தெரியாத ஒன்று.
சிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள்.
எது உண்மை? எது பொய்?இது பற்றி கொஞ்சம் அலசுவோம்!!
1.சக்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது!
| சாப்பிடக்கூடிய பழங்கள்: | சாப்பிடக்கூடாத பழங்கள்: |
| 1.ஆப்பிள் | 1.மாம்பழம் |
| 2.ஆரஞ்சு | 2.வாழை |
| 3.சாத்துக்குடி | 3.பலாப்பழம் |
| 4.மாதுளை | 4.சப்போட்டா |
| 5.கொய்யா | 5.திராட்சை |
| 6.பப்பாளி | 6.சீதாப்பழம் |
| 7.தர்பூசணி | |
| 8.அன்னாசி | |
| 9.எலுமிச்சை | |
| 10.தக்காளி | |
| 11.நெல்லிக்காய் |
- 2.சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகத்தை பாதிக்கும்.
- 3.பழங்களில் உள்ள மாவுச்சத்தின் பெயர்- ஃப்ரக்டோஸ்( குளுக்கோஸ் அல்ல). இது ஜீரணமாக இன்சுலின் தேவையில்லை. இதனை அளவோடு உண்டால் சக்கரை கூடாது. அதிகம் உண்டால் இது ஈரலுக்கு சென்று குளுக்கோஸாக மாறிவிடும்.
- 4.நமது உடலுக்குத் தேவையான மாவுச்சத்து 60% தானியங்களிலிருந்து கிடைக்கிறது. இதில் 10% பழங்களிலிருந்து எடுத்துக்கொண்டால் தானிய மாவுச்சத்து 50% ஆகக் குறையும்.
- 5.பழங்களில் உள்ள நார்ச்சத்து சக்கரை விரைவாக உயர்வதைத் தடுக்கிறது., மலச்சிக்கலைத் தடுக்கிறது,பசியைக் கட்டுப்படுத்துகிறது,வயிறு நிறைவை ஏற்படுத்துகிறது.
- சக்கரை நோயாளிகள் பழம் உண்ணலாம் என்று அறிந்தோம்.
- வாழைபழம் மலச்சிக்கலுக்கு நல்லது என்று உண்பார்கள். அது சக்கரை நோயாளிகளுக்கு உகந்தது அல்ல, ஏனெனில் அதில் மாவுச்சத்து அதிகம்.
- பப்பாளி: பப்பாளியில் விட்டமின் ’ஏ’ அதிகம். ஆகையால் சக்கரை நோயாளிகளுக்கு உகந்த பழமாக உள்ளது. மேலும் இது செல் சிதைவையும் தடுக்கிறது. இதுவும் கொய்யாவும் மலச்சிக்கலுக்கு உகந்தவை.
- ஆரஞ்சு,சாத்துக்குடி,நெல்லி: விட்டமின் ‘சி’ இவற்றில் இருப்பதால் புண்கள் எளிதில் ஆறும், அதனால் சக்கரை நோயாளிகள் உண்பது நல்லது.
- ஜூஸ்:
- சிலர் பழம் உண்ணலாம் என்றவுடன் பழ ஜூஸ் குடிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். இது தவறு.
- 1.ஜூஸில் பழத்தில் உள்ள நார்ச்சத்து இல்லை.
- 2.மேலும் சக்கரையை விரைவில் உயர்த்தும்.
- 3.விட்டமின்களும் வீணாகின்றன.
- சக்கரை சேர்க்காத பழரசங்கள்:
- இவற்றில் சக்கரை போடாவிட்டாலும் சுவைக்காக செயர்க்கை இனிப்புக்கள் மற்றும் குளுக்கோஸ் சேர்க்கிறார்கள்.
- கர்ப்பிணிப்பெண்கள் ஜூஸ் அருந்தினால் சக்கரை கூடும். ஆகையினால் அதிகம் ஜூஸ் அருந்தக்கூடாது.
- மேலும் பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக்குறைத்து பழங்கள் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும்.
- காலை உணவு: ஒரு இட்லியைக் குறைத்து ஒரு ஆப்பிள் சேர்க்கவும்.
- நூறு 100 கிராம் பழங்களில் உள்ள முக்கிய சத்துக்கள்:
| பழம் | மாவுச்சத்து | புரதம் | நார்ச்சத்து | கலோரி |
| ஆப்பிள் | 19 கிராம் | 0.36கிராம் | 3.3 கிராம் | 72 |
| சாத்துக்குடி | 7.06 | 0.47 | 1.9 | 20 |
| பப்பாளி | 13.7 | 0.85 | 2.5 | 55 |
| தர்பூசணி | 11.6 | 0.94 | 0.6 | 46 |
| ஆரஞ்சு | 15.4 | 1.23 | 3.1 | 62 |
| மாதுளை | 26 | 1.46 | 0.9 | 105 |
| அன்னாசி | 19.6 | 0.84 | 2.2 | 74 |
| எலுமிச்சை | 7.8 | 0.92 | 2.4 | 24 |
- மதிய உணவு: மூன்றில் ஒரு பங்கு சாதம் குறைத்து விட்டு ஒரு கொய்யா சேர்க்கவும்.
- இரவு உணவு: ஒரு சப்பாத்தியைக் குறைத்து 100 கிராம் பப்பாளி உண்ணவும்.
- இப்படி உண்டால் மாவுசத்து (சக்கரைச் சத்து) குறைந்து நார்ச்சத்து அதிகமாகும். அத்துடன் விட்டமின்கள்,தாது உப்புக்களும் கிடைக்கின்றன. வயிறும் நிறைந்து உண்ட திருப்தி ஏற்படும்.
- உங்களுக்கு சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா? ஒரே நேரத்தில் சாப்பிடாமல் 250 கிராம் பழங்களைப் பகிர்ந்து உண்ணவும்
inulalif
பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்!
- பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்!
- உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 உணவு பட்டியல் வருமாறு:
- கீரை வகைகள்:
உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவற்றில் வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை கண் பார்வைக்கும் மிக நல்லது.அத்துடன் கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய நான்கு அத்தியாவசிய சத்துக்களும் இவற்றில் அடங்கியுள்ளன.எனவே இவை உடல் நலத்திற்கு மிகவும் பயனளிக்கக் கூடியவை.- முழு தானியங்கள்:
- முழு தானியங்களில் 96 விழுக்காடு வரை நார்ச்சத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாது என்பதால் அச்சமின்றி உண்ணலாம்.
கொட்டை பருப்புகள்:- பாதாம், முந்திரி போன்ற கொட்டை பருப்புகள் உங்களது உணவு பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டியவை ஆகும்.புரதம், மெக்னீசியம், பி மற்றும் இ வைட்டமின் சத்துக்களை கொண்ட இந்த பருப்புகளை காலை சிற்றுண்டியிலோ அல்லது சாலட்டிலோ அல்லது தயிரில் தூவியோ உண்ணலாம்.
- இருதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.மேலும் கொழுப்பு கலோரிகளை கொண்டதும் கூட.ஆனால் இந்த கொழுப்பு இருதயத்திற்கு நன்மை செய்யக் கூடிய நல்லவகை கொழுப்பு ஆகும்.மாலை சிற்றுண்டியாக கூட இதனை சாப்பிடலாம். ஆனால் அதிக அளவில் சாப்பிட்டு விடக்கூடாது.ஒரு வாரத்தில் 15 முதல் 20 எண்ணிக்கையிலான பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்பு ஒருவருக்கு போதுமானது.
- தயிர்:
- குறைந்த கொழுப்புடைய அல்லது கொழுப்பற்ற தயிரில் வைட்டமின்கள், புரதம் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது.மேலும் உடலுக்கு நன்மை பயக்ககூடிய பாக்டீரியாவும் தயிரில் உள்ளது. வாரம் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு கோப்பை தயிர் ஒருவருக்கு போதுமானது. ஆனால் அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளக்கூடாது.அதற்கு பதிலாக வெறும் தயிரில் பழங்கள் அல்லது பெர்ரி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
- நாவற்பழம்:
- பெரும்பாலான நார்சத்து உணவு தயாரிப்புகளில் நாவற்பழம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அதற்கு காரணம் அதில் அதிக அளவு நார்சத்து இடம் பெற்றிருப்பதுதான். மேலும் ஆன்டாசிடென்ட்ஸும் இதில் அதிகமாக உள்ளது.இவை உடல் எடையை குறைக்க உதவுவதோடு, ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுக்கிறது. ஒரு கிண்ணம் நிறைய வாரம் மூன்றுமுறை ஒருவர் இதனை உட்கொண்டால் போதுமானது
அன்புள்ள அம்மாக்களுக்கு !!!
அன்புள்ள அம்மாக்களுக்கு
இதோ தேர்வு நெருங்கிவிட்டது தங்களின் அன்புச்செல்வங்களுக்கு
கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டிய நேரம் தந்தைகளைவிட தாய்களுக்கு- பொருப்புண்ர்ச்சி கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் இருக்கவேண்டும்
- இந்த சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலும் தேவையான ஆகாரமும் கண்டிப்பாக தேவை நல்ல ஊட்டமுள்ள சத்தான ஞாபகசக்திக்கு உகந்த உணவு கொடுக்கவேண்டும்
- ஜூஸ்கள் மற்றும் விட்டமின்கள் அடங்கிய வல்லாரை போன்ற ஞாபகசக்தியை தூண்டும் வகையில் உள்ள ஆகரம் கொடுக்க வேண்டும்
- அடுத்து எந்த நேரமும் படி படி எனசொல்லாமல் நேரம் ஒதுக்கி படிக்கச்சொல்லுங்கள்
- குறிப்பாக இரவு நேரங்களில் அதிகம் கண்விழிக்கவிடவேண்டாம் அதை தவிர்த்துநேரத்தோடு உறங்கவைத்துவிட்டு அதிகாலையில் எழுப்பி படிக்கச்சொல்லுங்கள்இரண்டொருநாள் சிரமமாக இருக்கும் பின் தானே எழுந்து படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்
- அதிகாலையின் படிப்பு கட்டாயம் மனதில் பதியும்
- இதெயெல்லாம்விட முக்கியம் அவர்களுக்கு உங்களின் அன்பும் ஆதரவும் கனிவான பேச்சும்தான் ஊக்கம்கொடுப்பதென்பது அனைத்தயும்விட நல்ல டானிக்
- நீ நன்றாக படிப்பாய் நன்றாக எழுதுவாய் நம்பிக்கைவைத்துப்படி எல்லாம் நல்லதாகவ நடக்கும் என் அவர்களுக்கு அடிக்கடி தைரியமூட்டுங்கள் சுமையை சுமப்பவர்களுக்கு மட்டுமே சுமையின் வலியும் வேதனையும அதன் அளவும்தெரியும்அதனால்தான் தாய்க்கு அதிக முக்கியத்துவம்ஆதலால் தாய்மார்கள்தான் அதிக அளவில் அக்கரை கொள்ளவேண்டும்
- வெற்றி தோல்வி என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று அதானால் எதுவாகஇருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனபக்குவத்தை அவர்களுக்குள் உருவாக்குங்கள் அதற்குமுன் நீங்களும் அதற்கு தயாராகுங்கள் நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும் இறைவனின் உதவியால்
அன்புடன் மலிக்கா
எனக்கு தெரிந்த சில டிப்ஸ்கள்
மட்டன்-கோழி-மீன் பொரிக்கும் போது பொரிக்கும் எண்ணையில் உப்பை சேர்த்துக்கொண்டால் சுவையும் கூடும், வேலையும் சிரமமில்லாமல் ஈசியாக முடியும். இது அதிகமான சுவையில் இருக்கும்- நாம் வீட்டைத் துடைக்கும் போது துடைக்கும் நீரில் சிறிது டெட்டாலையும் ஷாம்புவையும் சேர்துத்துடைத்தால் வீடு மணமாகவும் ப்ரகாசமாகவும் இருக்கும்.
- ஆப்பத்துக்கு மாவு கரைக்கும் போது தேங்காய்பால் சேர்க்கும் முன் 1/4 ஸ்பூன் சமையல் சோடாவை சேர்த்தால் ஆப்பம் கிரிஸ்பியாகவும் சாப்டாகவும் வரும்
அனுப்பியவர் சானாஸ்
சிறியவர்களின் பார்டி மெனு............

1. குறைந்த பட்சம் 3 வகையான உணவுப் பொருள்கள் இருக்க வேண்டும்
(பேஸ்ட்ரீஸ், ஸ்வீட்ஸ், சன்விச்ஸ்)
2. சோட் ஈட்ஸ் கைக்கடக்கமான அளவில் சிறியதாக இருக்க வேண்டும்.
3. பில்லிங் காரமில்லாமலும் , மசாலா குறைவாகவும் இருக்க வேண்டும்.
4. ஐசிங், அலங்கரிப்பும் வர்ணங்களில் இருக்க வேண்டும்.
5. புரூட் பானங்கள் செய்யும் போது அலர்ஜியை ஏற்படுத்தும் பழங்களில் செய்வதை தவிர்க்க வேண்டும்.
6. மொத்தத்தில் சிறியவர்களின் உணவு விடயத்தில் சுத்தம், சுகாதாரம் பேணப்படுவதோடு ஆரோக்கியமான
உணவுகளாகவும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
7. வீட்டு விஷேடங்களில் வீட்டிலேயே உணவுப் பொருள்களை தயாரிப்பதை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும
சானாஸ் சிஜாத்.
இஞ்சி சாறில் மருத்துவ குணம்

- சூடான நீரில் ஒரு ஸ்பூன் ப்ரெஷ் இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாற்றுடன், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடித்தால், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்
- இஞ்சி ஜூரண சக்தியை அதிகமாக்கும்.
- மிகவும் ஹெவியான, புரோட்டின் அதிகமுள்ள உணவை டைஜஸ்ட் செய்ய இஞ்சி கண்டிப்பாக உதவும்.
- நெஞ்சில் அதிக சளி இருந்தால் சூடான இஞ்சிச்சாறு இதமாக இருக்கும். நல்ல பலன் தரும்.
சகி
மொருமொருப்பாக இருக்க என்ன செய்வது
பூரிக்கு மாவு பிணையும் போது, ஒரு தேக்கரண்டி ரவையையும், ஒரு தேக்கரண்டி அரிசி மாவையும் சேர்த்துக் கொள்ளவும். அதன் பின்பு பூரியும் மொருமொருப்பாக இருக்கும்,சாப்பிட்டவர்கள் மனதும் பூரிப்பாக இருக்கும்..
சகி
உணவு மீர்ந்துவிட்டால்
சில நேரங்களில் நாம் அதிகமாக உணவுகள் செய்து மீந்துவிடும், அதை மீண்டும் பயன்படுத்தி வைக்காக இதோ சில டிப்ஸ்
ரவை உப்புமா மிஞ்சிவிட்டால் அதில் உள்ள மிளகாய், கறிவேப்பிலையை நீக்கி விட்டு நன்றாக பிசைந்து அதில் சம அளவு கோதுமை மாவு, கொஞ்சம் கரம் மசாலா, மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்துப் பிசைந்து சிறு சிறு பூரிகளாகச் பொரித்து எடுங்கள். சூவை அதிகம்.
வெண் பொங்கல் மீந்து விடுட்டால், கடுகு, உளுத்தப்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு, சிறிதளவு புளிக்கரைசலையும் சேர்த்துக் கொதித்ததும் அதில் மீந்த பொங்கலை சேர்த்துக் கிளறி இறக்கினால் அருமையான சாம்பார் சாதம் தயார்.
- சப்பாத்தி சில சமயங்களில் இழுக்கவே முடியாமல் உரத்து போய் விடும். அதனை தோசைக்கல்லில் போட்டு மொறுமொறுப்பாக சுட்டெடுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவைப்போல 1௧/2 மடங்கு சர்க்கரையை பாகு போல காய்ச்சி கம்பிப்பதம் வந்ததும் அதில் பொடித்த சப்பாத்தி, நெய், முந்திரி, ஏலத்தூள் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். ஆறியதும் துண்டுகள் போட்டு கொடுங்கள். விடியாசமான் ஸ்வீட் தயார்.
சகி






Latest Entries