உபயோகமான தகவல்களுக்கு பின்னூட்டம் (Comments/ Facebook Like) இட்டால், இதை பதித்தவர்களுக்கு ஊக்கமளிக்கும்!
சிந்தனைக்கு சில...!
பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.
சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.
நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.
நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
ஹைருன்
--------------------------------------------------------------------------------



சகோதரி நல்ல கருத்துக்களை பகிர்ந்திருக்கிறீர்கள்.
" பேசும் முன் கேளுங்கள் - எழுதும் முன் யோசியுங்கள் - செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள் "
இதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் வாழ்க்கையில் நிம்மதியை காணலாம்.
பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி சகோதரி ஹைருன்.
அன்புடன், சகோதரன் "மஹ்மூது".